ஊடகவியலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் தேவை அவசியமெனின் ஊடக அபிவிருத்தி அதிகாரசபையை அமைப்பதைவிட்டு மகிந்த சிந்தனையின் வேலைத்திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
எதிர்க் கட்சி தலைவரின் வாசஸ்தலத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கயந்த கருணாதிலக மேற்படி தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது ஊடக அபிவிருத்தி அதிகாரசபையை உருவாக்குவதானது 17 ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தாது புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சமனாகும்.
மற்றும் சியத தொலைக்காட்சி சேவையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றம் இழைத்தவர்களை அரசாங்கம் சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும்” என தெரிவித்தார்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக