இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் புகலிடக் கோரிக்கை தொடர்பில் கனேடிய குடிவரவு, அமைச்சர் ஜேசன் கென்னியுடன் கனடாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சு, புலனாய்வுப் பிரிவினர், கனேடிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு, குடிவரவு மற்றும் குடியுரிமை பிரிவு உள்ளிட்ட அதிகாரிகளுடனும் இலங்கை உயர்ஸ்தானிகர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதம், ஆட்கடத்தல் உட்பட நாடுகடந்த குற்றச்செயல்கள் மூலம் சர்வதேச மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து உலக நாடுகளுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என கனடாவின் வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கையர்கள் 231 பேருடன் கனடாவை நோக்கி 'எம்.வி.சன் சீ' எனும் கப்பல் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இது குறித்துத் கனடா தீவிர அக்கறை கொண்டிருப்பது குறிப்பிடத்தாகும்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
புதன், 11 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்








.jpg)





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக