மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதியொருவருக்கு நாளை ஆரம்பமாகும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
.20 வயதான ஏ.சுகிர்தன் எனும் இம்மாணவன் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு விண்ணப்பித்து யாழ்ப்பாணத்தில் பரீட்சை எழுதுவதற்கான அனுமதி அட்டையும் அம்மாணவனுக்கு கிடைத்திருந்தது.
ஆனால் யாழ்ப்பாணத்தில் பரீட்சை எழுதுவதற்கு அனுமதியளிக்குமாறு விடுத்த கோரிக்கையை அக்கறைப்பற்று நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
எனினும், அம்மாணவன் மட்டக்களப்பில் பரீட்சை எழுதுவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி. சில்வா தெரிவித்துள்ளார். இதற்காக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக