அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இருவர் கைது

14வயதுச் சிறுமியை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் இரு சந்தேக நபர்களை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமியின் காதலனும் 38 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியொருவரும் அச்சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் துஷ்பிரயோகத்துக்குள்ளாகிய அச்சிறுமியையும் கண்டி பிரதான நீதவான் லலித் ஏக்கநாயக்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட பொழுது சந்கேக நபர்கள் இருவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுமியை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.பீ.தியகெலினாவல தலைமையில் மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG