அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 1 ஜூலை, 2010

உர விற்பனை மோசடி : சம்மாந்துறையில் நால்வர் கைது

அம்பாறை மாவட்ட சம்மாந்துறைப் பகுதியில் மகிந்த சிந்தனை திட்டத்தினூடாக வழங்கப்பட்ட உரமூடைகளை மோசடி செய்து பதுக்கி வைத்திருந்த நால்வரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.


இச்சம்பவம் நேற்றுக் காலை நடைபெற்றுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
சுமார் 10 லட்சம் ரூபா பெறுமதியான 124 உரமூடைகள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தகநாயக்கா தெரிவித்தார்.
பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள உரமூடைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
6500 ருபா பெறுமதியான உரமூடைகள் மகிந்த சிந்தனைத் திட்டத்தின்கீழ் 350 ரூபாவுககு வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், உரமூடைகளைப் பதுக்கி வைத்து மேற்படி நபர்கள் 2,500 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது

0 கருத்துகள்:

BATTICALOA SONG