அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 21 ஜூன், 2010

மலையக மக்கள் முன்னணியின் புதிய தலைவராக இராதாகிருஷ்ணன்?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பாக எமது  இணையதளம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.இராதாகிருஷ்ணனுடன் சற்று முன் தொடர்பு கொண்டது.
தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை உறுதிப்படுத்திய வி.எஸ். இராதாகிருஷ்ணன், இது குறித்து தாம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் எமது  இணையதளத்திடம் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான பி.சந்திரசேகரனின் மறைவை அடுத்து அவரின் மனைவி சாந்தி சந்திரசேகரன் தலைமை பதவியை பொறுப்பேற்றார்.
எனினும், மலையக மக்கள் முன்னணியின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு தற்போது சாந்தி சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தலைவர் பதவி கைமாற்றப்பட்டால் சாந்தினி சந்திரசேகரன் கட்சியின் பொது செயலாளராக செயற்படுவார் என்று எமது  இணையதளத்திற்க்கு கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.[JKR

0 கருத்துகள்:

BATTICALOA SONG