அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 10 ஜூன், 2010

ஜனாதிபதி - சோனியா டில்லியில் நேற்று சந்திப்பு

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர்.
புதுடில்லி மயூரா ஹோட்டலில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கை உயர்மட்டக் குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தர, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் ஆகியோர் பங்கு கொண்டனர்.
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் நீண்டகாலமாக நிலவும் நல்லுறவை மேலும் பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இங்கு சோனியா காந்தி குறிப்பிட்டார்.
இலங்கை சகல துறைகளிலும் அபிவிருத்தியடைந்து வருவதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையிலான உல்லாசப் பிரயாணத்துறையை மேலும் முன்னேற்ற நல்ல தருணம் உருவாகியுள்ளதென்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி இரண்டாவது முறையாகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்டமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சோனியா, இரு நாட்டுத் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG