இந்தியாவில் கங்கை நதியில் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த இருபத்து ஐந்து பேரின் உடல்களை ஆற்றிலிருந்து மீட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
உத்திர பிரதேச மாநிலம் பால்லியா நகரருகே ஒரு கோயிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்கையில் அப்படகு கவிழ்ந்தது.30 பேர் வரைதான் பயணிகள் ஏறலாம் என்கிற இந்தப் படகில், இரு மடங்கு கூடுதலான பயணிகள் ஏறிச் சென்றிருந்தனர் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
பயணிகளில் நிறைய சிறார்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பதினேழு பேர் நீந்தி உயிர்பிழைத்துள்ளனர் என்றாலும், மேலும் பதினேழு பேரின் கதி என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக