அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 16 ஜூன், 2010

முல்லத்தீவு சென்றுள்ளார் லின் பெஸ்கோ

இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இங்கு வந்த, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலர் லின் பெஸ்கோ முல்லைத்தீவுக்குச் சென்றுள்ளார்.
முல்லைத்தீவுப் பகுதியில் அரசு மேற்கொண்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தமக்குத் திருப்தியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மே மாதம் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் இங்கு வந்திருந்த போது, அரசியல் நல்லிணக்கம், மனித உரிமைகள், அகதிகள் மீள்குடியேற்றம் ஆகியன தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவரிடம் உறுதிமொழி வழங்கி இருந்தார்.
இதன் ஒரு தொடர்ச்சியாகவே லின் பெஸ்கோவின் விஜயமும் அமைந்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG