அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 12 மே, 2010

லிபிய விமான விபத்தில் 8 வயது சிறுவன் உயிர்தப்பிய அதிசயம்!

லிபிய விமானம் ஒன்று டிரிபோலி விமான நிலையத்தில் இன்று விபத்துக்குள்ளானதில், 105 பேர் பலியாகினர் என்ற செய்தி வெளியானது. எனினும் விமானத்தில் பயணித்த 8 வயது சிறுவன் மட்டும் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளதாகச் சற்று முன்னர் கிடைத்த செய்தி தெரிவிக்கின்றது.

தென்னாப்பிரிக்காவின் ஜோன்ஸ்பெர்க் விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.00 மணியளவில், 94 பயணிகள் மற்றும் 11 சிப்பந்திகளுடன், லிபியா நாட்டின் அஃப்ரிகுயா என்ற விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று, லிபியாவின் டிரிபோலி நகருக்கு வந்து கொண்டிருந்தது.
டிரிபோலி விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கும்போது, திடீரென நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் பயணம் செய்த 105 பேரும் பலியானதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த விமானத்தில் பயணித்த 8 வயது சிறுவன் ஒருவன் காயத்துடன் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளதாகவும், அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பது குறித்த விவரம் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை

0 கருத்துகள்:

BATTICALOA SONG