மட்டக்களப்பு வாழைச்சேனைப் பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று பிற்பகலில் கைதுசெய்யப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேச வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டிற்கு சேதம் விளைவித்துள்ளதுடன் 8லட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களையும், 39லட்சம் ரூபாய் பெறுமதியான பணத்தையும் கொள்ளையிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வாழைச்சேனைப் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 13 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக