பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முயற்சிகளின் போது ஒத்துழைப்பு வழங்கியதனைப் போன்றே, ஊழல் மோசடிகளை ஒழிக்கவும் பூரண ஆதரவு ஜனாதிபதிக்கு வழங்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமது அன்றாட வாழ்க்கையை கிரமமாக முன்னெடுக்க ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையின் கீழ் ஊழல் மோசடியற்ற நாடொன்றை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாக அவர் தெரவித்துள்ளார். பொலிஸார் மக்களை விட்டு விலகிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தினால் பொலிஸார் மக்களை விட்டு விலகியுள்ளதாகவும், மீண்டும் மக்களின் நண்பர்களாக பொலிஸார் மாற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலிகளை இல்லாதொழிக்க முடியாதென முழு உலகமுமே கருத்து வெளியிட்ட போது அரசாங்கம் நிலையான கொள்கையொன்றின் மூலம் புலிகளை தோற்கடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக