அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 18 மார்ச், 2010

கிளி., முல்லை. மக்கள் பிறப்பு-இறப்பு சான்றிதழை வவுனியாவில் பெற ஏற்பாடு

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பிறப்பு, இறப்பு பதிவுகளின் சான்றுப் பிரதிகளை பெற்றுக்கொள்ள விரும்புவோர் வவுனியா கச்சேரி வளாகத்தில் அமைந்துள்ள காணி மாவட்டப் பதிவகத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து ஒரே நாளில்
சான்றுதல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
வவுனியா காணிப் பதிவாளரும் மேலதிக மாவட்டப் பதிவாளருமான ஆனந்தி ஜயரட்ண இத்தகவலைத் தெரிவித்தார்.
அண்மைக் காலத்தில் மாளிகாவத்தை மத்திய பதிவேட்டறையில் இருந்தே வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் சான்றிதல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
தற்போது மேலதிகமான கட்டணம் எதுவுமின்றி வவுனியா மாவட்டப் பதிவகத்தில் கணினிமயப்படுத்தப்பட்ட சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG