அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 24 மார்ச், 2010

விசாரணையின்றி சிறையிலிருந்த 461பேர் இதுவரை விடுதலை : புத்திரசிகாமணி

வழக்குகள் விசாரணைகள் எதுவுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதி சட்ட மறுசீரமைப்பு முன்னாள் பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட துரித விசாரணைகளை அடுத்து இவர்கள் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது தொடர்பில் 11 சட்டத்தரணிகளை விசேடமாக நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கைதிகளின் கோவைகள் தனித்தனியே ஆராயப்பட்டு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 200 பேரின் கோவைகள் ஆராயப்பட்டு வருகின்றது. அவர்களுள் வழக்குகள் பதிவு செய்ய அவசியமில்லாதவர்கள் விடுவிக்கப்படுவர்" என்றார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG