
நிதிச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க அரசாங்கத்தினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என பிரபல அமெரிக்க தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்ணம் தெரிவித்துள்ளார்.
பாரிய நிதிச் சந்தை மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல அமெரிக்கத் தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்ணத்தை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்திருந்தது.
போலியான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தமது அரசியல் சாசன உரிமையை மீறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பங்குச் சந்தையில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ராஜ் ராஜரட்ணம் அறிந்திருக்கவில்லை என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், சட்டவிரோத பங்குப் பரிவர்த்தனையின் ஊடாக ராஜ் ராஜரட்ணம் பெருந்தொகை லாபத்தை ஈட்டியுள்ளதாகத் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக