அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 25 நவம்பர், 2009

மட்டு.- கல்லடி புதிய பால நிர்மாண வேலைகள் இடைநிறுத்தம்


மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலையிலுள்ள கல்லடிப் பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கும் நிர்மாண வேலைகள் கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இம்மாவட்டத்தில் சுனாமிக்குப் பின்னரான மீள் கட்டுமானத் திட்டத்தின் கீழ் ஜப்பான் உதவியுடன் குறித்த புதிய பாலம் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

சீன நிறுவனமொன்று இதற்கான ஒப்பந்த வேலைகள் பொறுப்பேற்று ஆரம்ப வேலைகள் நடைபெற்று வந்தன. தற்போது நிர்மாண வேலைகள் இடைநிறுத்தப்பட்டு இதற்காக கொண்டுவரப்பட்ட உபகரணங்களும் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கின்றன.

குறித்த ஒப்பந்த நிறுவனத்தின் வேலைகள் திருப்தியின்மை, மற்றும் தாமதங்கள் காரணமாக ஏற்கனவே வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரிகள் சபை கூறுகின்றது.

தற்போது ஒப்பந்தம் வேறு நிறுவனம் ஒன்றுக்கு மாற்றப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG