வியாழன், 14 மார்ச், 2013

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதம நீதியரசருக்கு அழைப்பாணை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாராளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை நிறைவேற்றியதன் மூலம், ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சொத்து விபரங்களை வெளியிடாமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் N;பாலியானவை என பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக