ம ட்டக்களப்பு சிறைச்சாலையை மாந்தீவுக்கு அகற்றுவதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை விஸ்தரிக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக தற்போது இது மாற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் இடம் பெற்ற அவசர மற்றும் விபத்துச் சேவைப் பிரிவை ஆரம்பிக்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றி பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு சிறைச்சாலையை அது தற்போது அமைந்திருக்கும் இடத்திலிருந்து அகற்றி அந்த இடத்தை மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையை விஸ்தரிப்பதற்காக வழங்கும் ஆலோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இது விடமயாகப் தான் சிறைச்சாலைகள் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன் அந்த சிறைச்சாலையை மாந்தீவுக்குக் கொண்டு போவது பற்றி ஏற்கெனவே பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
மாந்தீவுதான் சிறைச்சாலைக்குப் பொருத்தமான இடம் என்றும் பிரதியமைச்சர் முரளிதரன் சொன்னார்.
மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு வேறு காணிகள் இல்லை. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் இருக்கும் ஒரேயொரு அரச காணி மட்டக்களப்பு சிறைச்சாலை அமைந்துள்ள வளாகம்தான்.
எனவே அதனை இடம் மாற்றினால் மட்டக்களப்பு வைத்தியசாலை விரிவாக்கம் பெறும். அதேவேளை சிறைச்சாலை இல்லாத நகரமாகவும் மட்டக்களப்பு நகரம் இருக்கும் என்றார்.
இதேவேளை இவ்வருட இறுதியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்று நோய் சிகிச்சைப் பிரிவு இயங்க ஆரம்பித்து விடும் என்றும் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் நம்பிக்கை தெரிவித்தார்.வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 14 மார்ச், 2013
மட்டு. சிறைச்சாலை மாந்தீவுக்கு மாற்றம்
ம ட்டக்களப்பு சிறைச்சாலையை மாந்தீவுக்கு அகற்றுவதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை விஸ்தரிக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக தற்போது இது மாற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் இடம் பெற்ற அவசர மற்றும் விபத்துச் சேவைப் பிரிவை ஆரம்பிக்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றி பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு சிறைச்சாலையை அது தற்போது அமைந்திருக்கும் இடத்திலிருந்து அகற்றி அந்த இடத்தை மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையை விஸ்தரிப்பதற்காக வழங்கும் ஆலோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இது விடமயாகப் தான் சிறைச்சாலைகள் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன் அந்த சிறைச்சாலையை மாந்தீவுக்குக் கொண்டு போவது பற்றி ஏற்கெனவே பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
மாந்தீவுதான் சிறைச்சாலைக்குப் பொருத்தமான இடம் என்றும் பிரதியமைச்சர் முரளிதரன் சொன்னார்.
மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு வேறு காணிகள் இல்லை. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் இருக்கும் ஒரேயொரு அரச காணி மட்டக்களப்பு சிறைச்சாலை அமைந்துள்ள வளாகம்தான்.
எனவே அதனை இடம் மாற்றினால் மட்டக்களப்பு வைத்தியசாலை விரிவாக்கம் பெறும். அதேவேளை சிறைச்சாலை இல்லாத நகரமாகவும் மட்டக்களப்பு நகரம் இருக்கும் என்றார்.
இதேவேளை இவ்வருட இறுதியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்று நோய் சிகிச்சைப் பிரிவு இயங்க ஆரம்பித்து விடும் என்றும் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

















0 கருத்துகள்:
கருத்துரையிடுக