தினமுரசு பத்திரிகையின் வடமராட்சிப் பிரதேச செய்தியாளர் மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் பொலிகண்டியைச் சேர்ந்த விசிந்தன் என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள விசிந்தனை ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்), ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளர் சிறிரங்கேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது.
-->
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக